சிவன் சொத்து குல நாசம்

சிவன் சொத்து குல நாசம் இந்த பழமொழி அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த பழமொழியை எதற்காக சொல்லி வைத்தார்கள்.  பழமொழியை அனைவரும் தவறாக புரிந்து கொண்டனர் சிலபேர் சிவன் அவரது கோயில் இருக்கும் திருநீற்றை எடுத்துக்கண்டு வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்கின்றனர். ஏனென்றால் சிவனுடைய திருநீரு சிவன் சொத்து என்றும் அந்த திருநீற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள் அது வீட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்கின்றனர். இதன் உண்மை அர்த்தம் அதுவல்ல எந்த ஒரு தெய்வத்தின் திருநீரையும் தாங்கள் ஆலயத்திலிர நீங்கள் எந்த கோயில் இருந்தாலும் ந்து வீட்டிற்கு எடுத்து வரலாம் அது ஈஸ்வரன் ஆனாலும் சரி சனீஸ்வரன் ஆனாலும்  இறைவனுடைய அருள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும். நீங்கள் எந்த கோவிலில் இருந்தும் திருநீற்றை தாராளமாக வீட்டிற்கு கொண்டு வரலாம்,அதன் பிறகு அதை அனைவருக்கும் தரலாம். சரி அப்படி என்றால் இதன் அர்த்தம் என்ன சிவனாக பட்டவர் அதாவது சிவனை கும்பிடும் சிவனடியார் அவரே சிவனின் சொத்து எவரொருவர் சிவனை சொத்து என்று நினைத்து கும்பிடுகிறார் அவரே சிவனின் சொத்து அவரை மனதால் யாரொருவர் தீங்கு நினைத்தாலும் அவரது குல நாசம் ஆக்கப்படும் அதாவது சிவனால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் இதுவே இதன் உண்மையான அர்த்தம் சிவன் சொத்து குலநாசம் என்றால் இதுதான் உண்மையான அர்த்தம். காலப்போக்கில் அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு அனைவரும் சிவனின் திருநீற்றை கூட வீட்டிற்கு கொண்டு செல்லாமல் ஆலயத்திலேயே கொட்டி விடுகின்றனர். இனியாவது தாங்கள் எந்த தெய்வத்தைக் கும்பிட்டாலும் அதன் திருநீற்றை தாராளமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் சிவனடியார்களை தேவையில்லாமல் துன்புறுத்தாதீர்கள் அது நிச்சயம் நமக்கு அழிவை ஏற்படுத்தும் நன்றி
 ஓம் நமச்சிவாய
 ஓம் நமச்சிவாய 
 ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment

thanks for reading