சனிப்பெயர்ச்சியின் முக்கியமான தகவல்கள் 2023.......astro nithiyandran

கிரகப் பெயர்ச்சியில் சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது 

இதில் சனிப்பெயர்ச்சி என்பது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய ஒன்று  இந்த சனீஸ்வர பகவான் எந்த கிரகத்துடன் சேர்ந்து உள்ளாரோ அந்த கிரகத்தின் மீது அவரது ஆதிக்கத்தை செலுத்துவார் 

பொதுவாக சனீஸ்வர பகவான் கர்ம காரகன் அதாவது பத்தாம் பாவமான தொழில் ஸ்தானத்துக்கு அதிபதியாக வருகிறார் மற்றும் ஆறாம் பாவத்திற்கும் பன்னிரண்டாம் பாவத்திற்கும் அவரே முதல் தர அதிபதி ஆகிறார்

 அவர் கர்ம பலனை அளிப்பவர் கரும பலன் என்றால் என்ன கருமம் என்பது நாம் செய்யும்  செய்யும் செயலின் விளைவாக என்ன பலன் நமக்குத் தர வேண்டும் என்பதை சனீஸ்வர பகவான் தீர்மானித்து அதன்படியே அவரது ஏழரை சனி மற்றும் கண்டச் சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி போன்ற ஆதிக்கத்தின் மூலம் நமக்கு அந்த பலன்களை அவர் தருகின்றார்

 ஒருவர் நிகழ்காலத்தில் எவ்வளவு பாவம் புண்ணியங்கள் செய்துள்ளார் என்பதை கணக்கிட்டு நிகழ்காலத்திலேயே அவர்களுக்கு பாவ புண்ணிய பலன்களின் பலன்களை அளிக்கின்றார் 

அதன் விளைவாகத்தான் ஒருவர் 7 1/2 சனியில் மிகப்பெரிய செல்வந்தராகவும் ஒருவர் 7 1/2 சனியில் செல்வந்தராக இருந்த அவர் கீழ் நிலைக்கும் தள்ளப்படுகிறார்

 இந்த சனீஸ்வர பகவான் ஒவ்வொரு ராசிக்கும் இரண்டரை ஆண்டுகளும் வக்கிரகதி ஏற்படும் போது சில நேரங்களில் மூன்று வருடங்களுக்கும் அவர் அந்த பாவத்தில் நிலைபெற்று இருக்கிறார்

 சனீஸ்வர பகவானே பொருத்தவரை அவர் இருக்கும் பாவத்தை பாதிப்பது இல்லை அவருடன் சேர்க்கும் கிரகத்தை அவர் பாதிப்படையச் செய்வார். 

அதேபோல் அவரது பார்வை சிறப்பு பார்வையான 3,10 ஆகிய பார்வைகள் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியவை ஏழாம் பார்வை அதுவும் ஆபத்து விளைவிக்க கூடியவை.

 ஆனால் சிறப்பு பார்வைகள் அதிக ஆபத்து விளைவிக்கும் இந்த சிறப்பு பார்வை எந்த எந்த பாவத்தின் மீது விழுகிறதோ  அந்த பாவங்களின் காரகங்கள் அழிக்கப்படுகின்றன 

பொதுவாக  சனீஸ்வரர் பகவானின் பார்வை ஆனது ஒரு தொழிற் ஸ்தானத்தில் மீது விழுவது என்றால் அந்த தொழிலை அவர் அழிக்க கூடிய அமைப்பு ஏற்படுத்துவார் அப்படி என்றால் தொழில் பிரச்சனை ஏற்படும்.

இதே ஆறாம் பாவத்தில் விழுந்தால் ஆறாம் பாவத்தில் இரண்டு காரத்துவம்  உண்டு ஒன்று நோய் மற்றொன்று அதே தொழில் ஒருவர் அடிமை தொழில் செய்வாரா இல்லையா என்பதை ஆறாம் பாவத்தை கொண்டு அறிய முடியும்

 அதேபோல் நோயும் ஆறாம் பாத்தைக் கொண்டு அறிய முடியும் இந்த சனீஸ்வர பகவானின் பார்வை ஆறாம் பாவத்தில் இருந்து விட்டால் நோய் என்பது அழிக்கப்படும் கடன் என்பதும் அழிக்கப்படும் அதேபோல் அடிமை தொழில் என்பதும் அழிக்கப்படும் 

இப்படி நல்ல பாவங்களா இருந்தாலும் கெட்ட பாவங்களாக இருந்தாலும் அந்த இடத்தில் பார்வை விழுந்து விட்டால் அது அழிக்கப்படுகிறது அல்லது தாமதம் படுத்தப்படுகிறது

 இப்படிப்பட்ட சனீஸ்வர பகவான் ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்த எந்த பாவத்தில் இடம்பெற்று இருக்கிறார் என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அந்த விதி என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும் 

அதேபோல் ராசி மனோகாரகன் மனதை ஆளக்கூடிய சந்திர பகவானுக்கு அவர் எந்த பாவத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து மனம் எந்த அளவுக்கு சஞ்சல படும் என்பதை நாம் ஆராய்ந்து சொல்ல வேண்டும் 

நீங்கள் ஒரு பெயர்ச்சி என்பதை ராசி ரீதியாகவும் பார்க்க வேண்டும் லக்ன ரீதியாகவும் பார்க்க வேண்டும் லக்னத்தை வைத்து நீங்கள் விதியை தீர்மானிக்க வேண்டும் ராசியை வைத்து மனதை தீர்மானிக்க வேண்டும்

 எனது அடுத்தடுத்த பதிவில் ஒவ்வொரு லக்னத்திற்கும் சனிப்பெயர்ச்சி என்னென்ன செய்யப் போகிறது என்பதையும் ஒவ்வொரு ராசி படி சனிப்பெயர்ச்சி என்னென்ன செய்யப் போகிறது என்பதை நான் விரிவாக எழுத உள்ளேன் நீங்கள் அதைப் பார்த்து அவரவர் ராசி லக்னத்திற்கு பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள் 

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லக்னத்துக்கும்  இரண்டிற்கும் வேறுபட்ட நிகழ்வுகள் நடக்கும் ஒன்று மனரீதியான போராட்டம் இன்னொன்றுடு வாழ்க்கை விதி ரீதியான போராட்டமாக இருக்கும்


 எனது youtube பக்கமான Astro nithiyandran என்பதை subscribe செய்து கொள்ளுங்கள்........ 

By Astro nithiyandran blog

No comments:

Post a Comment

thanks for reading