கிரகங்கள் உச்ச ,நீச வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்

Astro Nithiyandran

ஜனன ஜாதகத்தில்

 சூரியன் உச்சம் பெற்றால் செல்வந்தர்கள் மேன்மையான குணம் உடையவர் வீரமிக்கவராகவும் இருப்பார் 

சந்திரன் உச்சம் பெற்றால் நல்ல உணவு உடை ஆபரணம் உடையவராக இருப்பார் 

செவ்வாய் உச்சம் பெற்றால் பகட்டானவராகவும் வீரமிக்கவராகவும் வேறு ஊரில் வசிப்பவராகவும் இருப்பார்

 புதன் உச்சம் பெற்றால் அறிவாற்றல் உடையவராக இருப்பார்

குரு உச்சம் பெற்றால் கல்வி புகழ் செல்வம் உடையவராக இருப்பார்

 சுக்கிரன் உச்சம் பெற்றால் ஏல் இசை நாடகம் டிவி நடனம் இவற்றில் ஆர்வமும் தேர்ச்சும் உடைவதாக இருப்பார். விளையாட்டில் ஆர்வம் உடையவராக இருப்பார்

 சனி உச்சம் பெற்றால் அரசியலில் தலைமைப்பதவியும் அரசு கௌரவ பதிவையும் தொழிலாளர் தலைவராகவும் காட்டில் விளையும் பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் நன்மை பெறுவதாகவும் இருப்பார்

 நீச்ச வீட்டில்

 சூரியன் நீச்ச வீட்டில் இருந்தால் தன்னைச் சான்றவர்களாளே தாழ்நிலை பெறுவார் 

சந்திரன் நீச்சம் அடைந்தால் உடல்நலம் பாதிக்கும் மற்றும் ரோகம் உடையவராக இருப்பார்

 செவ்வாய் நீச்சமடைந்தால் மனம் பாதிக்கப்படும் மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டி வரும் 

புதன் நீச்சம் பெற்றால் உறவினர்களால் பகை ஏற்படும்

 குருநீச்சம் பெற்றால் புகழ் இல்லாமல் ஏழ்மையை உடையவராக இருப்பார் 

சுக்கிரன் நீச்சம் பெற்றால் கெட்ட எண்ணமும் மற்றவரிடம் பணியாற்றும் நிலையும் கணவன் மனைவியின் பிரிவும் ஏற்படும்

 சனி நீச்சமாக இருந்தால் ஒழுக்க குறைவும் தாழ்நிலை அடைவதும் வறுமையால் வாடும் நிலையும் ஏற்படும்... 
Astro Nithiyandran..... 

astrological remedies......ஜோதிட பரிகாரங்கள்

ஜோதிட பரிகாரங்கள் ஒருவர் ஜாதகத்தில் பலதரப்பட்ட பாதிப்புகள் இருக்கக்கூடும் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பரிகாரங்கள் செய்ய வேண்டியது இருக்கும் 

அப்படி இருக்கும் பொழுது ஒரு பரிகாரத்திற்கும் மற்றொரு பரிகாரத்திற்கும் எத்தனை மாதங்கள் இடைவெளி வேண்டும் என்று பலர் குழப்பத்தில் கேட்கின்றனர்

 முதலில் பரிகாரம் என்றால் என்ன பரிகாரம் என்பது எந்த கிரகத்தின் அடிப்படையில் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமோ அந்த கிரகத்தை சரிவர இயங்க செய்வதை பரிகாரம் 

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் பாதிக்கப்படும் பொழுது அந்த கிரகத்தின் கதிர்வீச்சு எந்த ஆலயத்தின் மீது அதிகமாக விழுகிறதோ அந்த ஆலயத்தில் சென்று இறைவனை தரிசனம் செய்யும் பொழுது 

அதில் பிரசித்தி பெற்ற கற்களால் ஆன அந்த விக்கிரத்தின் மீது விழும் ஒளியானது நமது உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்

 ஆதலாலே குறிப்பிட்ட பாதிப்புக்கு குறிப்பிட்ட ஆலயம் செல்ல வேண்டும் என்பது ஜோதிடத்தில் ஒரு விதி

 பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மட்டும பிரசித்தி பெற்ற கற்களில் ஆன சிலைகள் வைப்பதுண்டு

 ஆதலால் பிரசித்தி பெற்ற சிலைகளிலே படும் ஒளிகளுக்கு அந்த தன்மையும் அதில் படும் அபிஷேகப் பொருட்களுக்கு அபரிமிதமான தன்மையும் இருப்பதால் கோயில்களுக்குச் சென்று நீங்கள் அபிஷேகத்தையும் தரிசனத்தையும் கண்டு களிக்கும் பொழுது உங்களுக்குள் இருக்கும் பாதிப்பு சற்று விலகுவதற்கு வாய்ப்பு உண்டு 

ஒரு பரிகாரத்திற்கும் மற்றொரு பரிகாரத்திற்க்கும் நிச்சயமாக இடைவெளி எதுவும் தேவையில்லை ஆனால் எந்த பரிகாரத்தை எந்த கிழமையில் செய்ய வேண்டுமோ அந்தப் பரிகாரத்தை அந்த கிழமையில் செய்ய வேண்டும்

 அதனால் அந்த நாட்களில் இடைவெளி இருந்தால் போதும் அதாவது திதி நாட்கள் இது அனைத்தும் குறித்து, நீங்கள் சரியான முறையில் உங்களது பரிகாரத்தை செய்தால் போதும்

 சரியான நேரத்தில் நீங்கள் ஆலயம் சென்று வந்தால் போதும் இதற்கென்று தனிப்பட்ட இடைவெளி எதுவும் இல்லை ஆதலால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆலயம் செல்லலாம் எப்போது வேண்டுமானாலும் பரிகாரத்தை செய்து முடித்துக் கொள்ளலாம் அதற்கான நேரத்தையும் காலத்தையும் குறித்துக் கொண்டால் போதும் 
Astro Nithiyandran..... 

is astrology true..... ஜோதிடம் என்பது உண்மையா....

Astrology is true...... 

ஜோதிடம் என்பது உண்மையா அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம் 
முதலில் ஜோதிடம் என்பது 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள் 12 ராசிகளை கொண்டது

 ஒரு மனிதனது வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை இடையில் நடைபெறுகின்ற நிகழ்வை நாம் முன்கூட்டியே கணிப்பதுதான் ஜோதிடம் 

அதாவது மனிதனின் பிறப்பு இறப்பு என்பது நிச்சயமான ஒன்று மனிதனோட வாழ்க்கையில் மூன்று பருவங்கள் உண்டு எந்த மனிதனாக இருந்தாலும் குழந்தை பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் உண்டு

 குழந்தை பருவத்தில் கல்வி என்பது இன்றியமையாத ஒன்று அதுபோல் இளமைப் பருவத்தில் திருமணம் குழந்தை என்பது இன்றியமையாத ஒன்று அது போல் முதுமை பருவத்தில் நோய் ஓய்வு என்பன இன்றியமையாத ஒன்று 

அனைத்து மனிதனுடைய வாழ்க்கையும் இதற்குள் அடங்கிவிடும் சரி ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த நிகழ்வுகள் எப்படி நடைபெறுகின்றன என்பன அவர்கள் பிறக்கும்போது பூமியின் மீது எந்த கதிர்வீச்சுகள் விழுகின்றதோ அந்தக் கதிர்வீச்சின் பண்புகளை உள்வாங்கி மனிதன் பிறக்கின்றான்

 அவன் எப்பேர் பட்ட சூழ்நிலையில் இருக்கின்றானோ அதற்கு தகுந்தாற் போல் அந்த மனிதனின் என்ன ஓட்டங்கள் மாறுகின்றன ஒரு மனிதன் எந்த கதிரை உள்வாங்கின்றனோ அந்தக்கதிர்வீச்சின் தன்மையே அவன் வாழ்நாள் முழுவதும் பிரதிபலிக்கின்றான்

 இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இம்மூன்று பருவத்திலும் என்ன எண்ண ஓட்டங்களை  கொண்டிருப்பான் என்பதை நாம் சொல்ல முடியும் 

இந்த ஜோதிட கலையில் விதி அதாவது அவன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவுக்கு அனுகூலமாக சொல்ல முடியும்

 இறைவனின் பரிபூரண அருள் இருந்தால் ஒரு மனிதன் ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆராய முடியும் 

அப்படி இல்லை என்றால் அவனால் ஓரளவே ஆராய்ந்து சொல்ல முடியும் எப்படி 0 முதல் 9 வரை உள்ள எண்களை கொண்டு நம்மால் எத்தனை கோடி எண்களை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் 

அது போல தான் மனிதன் இந்த 12 ராசிகளை வைத்து எத்தனை கோடி பேர் உலகத்தில் இருந்தாலும் அத்தனை கோடி பேர்களுக்கும் ஒரு அமைப்பை சொல்ல முடியும் 

இப்படி அமைப்பு இருந்தால் அது என்னென்ன விளைவுகளை எடுத்துக் கூறும் என்பதை நம்மால் சொல்ல முடியும் தொடரும்....... 

By Astro Nithiyandran...... 

ஜோதிடப்படி திருமணம் - astrology

 ஒருவர் ஜாதகத்தில் திருமணம் என்பது அவரின் ஏழாம் பாவத்தை குறிக்கும் 

சரி பத்து பொருத்தம் கட்டங்கள் பொருத்தம் இவை அனைத்தும் பார்க்கப்பட்டு பின்பு நடைபெறுகிறது அப்படிப்பட்ட திருமணத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரிவு குழந்தையின்மை தற்கொலை எண்ணம் போன்றவை தோன்ற காரணம் என்ன 


அப்படி என்றால் இந்த பத்து பொருத்தம் கட்டப் பொருத்தம் எல்லாம் பொய்யா ...

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழாம் இடம் எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பார்க்க வேண்டும்

 அந்த ஏழாம் இடத்தில் எந்த கிரகம் உள்ளது என்பதையும் அது எந்த நட்சத்திரத்தில் விழுந்து உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும் 

அந்த ஏழாம் பாவம் அதிபதி எந்த  பாவத்துடன் தொடர்பு கொண்டு உள்ளார் என்பதை பார்க்க வேண்டும் 

ஏழாம் பாவ அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி எந்த பாவத்தில் உள்ளார் அவர் எப்படி உள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும் 


இப்படி எல்லாம் பாவங்களையும் கவனிக்க இப்படி ஏழாம் பாவத்தை அலசி ஆழ்ந்த பிறகு ஒரு திருமண நடைபெற்றாலும் அவர்களுக்கு பிரிவு ஏற்படுவதற்கான காரணம் ......

ஜாதகத்திலேயே அவர்களுக்கு திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் எப்படி இருக்கும் என்பது முன்வைக்கப்பட்ட ஒன்று.

 நீங்கள் எந்த பெண்ணை திருமணம் செய்கிறீர்களோ அதை விடுத்து வேறு பெண்ணை திருமணம் செய்திருந்தால் இதுதான் நடக்கும்

 நமக்கு விதியே இப்படித்தான் என்று அமைந்துவிட்டால் எந்த பொண்ணை எப்பேர்பட்ட இடத்தில் இருந்து  திருமணம் செய்தாலும் விதிப்படி தான் நடக்கும்

 இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் தாங்க தங்களின் தசா புத்தியே அலசி ஆராய்ந்து அது எப்பொழுது வருகிறது?

 எப்பொழுது பாதகமான திசை வருகிறது என்று தெரிந்து கொண்டு அதற்கு முன்னால் சில பரிகாரங்களையும் சில தெய்வ வழிபாடுகளையும் செய்தால்  இதிலிருந்து வெளிவர முடியும்


By Nithiyandran r thedalin thedal tamil blog.... 

மகாபாரதத்தில் யட்சன் கேட்ட கேள்விக்கு தர்மன் அளித்த பதில்கள்....

யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?

தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.

யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?

தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.

யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?

பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.

யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?

தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.

யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?

தருமர்: ஒரு தாயின் மனம்.

யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

தருமர்: அவனுடைய தந்தை.

யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?

தருமர்: மனிதனின் மனம்.

யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?

தருமர்: கவலை.

யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?

தெருமர்: மீன்.

யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?

தருமர்: முட்டை.

யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?

தருமர்: நதி.

யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?

தருமர்: அவன் பெற்ற கல்வி.

யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?

தருமர்: அவன் மனைவி.

யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?

தருமர்: நல்ல வைத்தியன்.

யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?

தருமர்: அவன் செய்கிற தருமம்.

யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?

தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.

யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?

பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.

யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?

தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?

தருமர்: நோயின்மை.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?

தருமர்: மனத்திருப்தி.

யட்சன்: சிறந்த தருமம் எது?

தருமர்: அஹிம்சை

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?

தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?

தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.

யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?

தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.

யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?

தருமர்: தர்மத்திற்காக.

யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?

தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.

யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?

தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.

யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?

தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.

யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?

தருமர்: கோபம்.

யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?

தருமர்: பேராசை.

யட்சன்: எவன் சாது?

தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.

யட்சன்: எது தைரியம்?

தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்

யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?

தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.

யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?

தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.

யட்சன்: எது டம்பம்?

தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.

யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?

தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.

யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?

தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.

யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?

தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.

யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?

தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?

தருமர்: வெற்றியை ஆடைகிறான்.

யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?

தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.

யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?

தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.

யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?

தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.

யட்சன்: எது ஆச்சரியம்?

தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.

யட்சன்: எவன் புருஷன்?

தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.

யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?

தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன்....

As per Hindu astrology Can women marry a man who is younger to her.....

 ஜோதிட சாஸ்திரப்படி ஒரு பெண் தன்னவிட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யலாமா இதற்கான பதிலை பார்ப்போம் 

முதலில் பெண்ணுக்கு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு அதாவது பெண்ணிற்கு ஆண் குணம் ஆணிற்கு பெண் குணமும் உண்டு எந்த குணம் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது 

அதன்படியே அவரின் குணம் அமைகிறது இப்பொழுது ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்பொழுதும் சார்ந்து வாழ்கின்றார் 

பிறந்த பிறகு தாயின் அரவணைப்பு அதற்குப் பிறகு மனைவியின் அரவணைப்பில் அதன் பிறகு மகளோ மகனோ இருந்தால் அவர்களின் அரவணப்பில் வாழ்கிறார்து 

அபோல ஒருவர் ஜாதகப்படி ஒரு திசை புத்தி என்பது கிட்டத்தட்ட ஒரே வயது உள்ள ஆணோ அல்லது ஒரு வயது  அதிகமாக உள்ள ஆணுக்கோ  பெண்ணுக்கோ ஒரே மாதிரியாக அமைய அதிகமாக வாய்ப்பு உள்ளது

 இரண்டு ஆடுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒவ்வொரு ராசிக்கு பெயிற்சி ஆவதால் அவர்களுக்கு இருவருக்கும் சனியின் ஆதிக்கம் இருக்கும் 

ஆனால் ஒரு இரண்டரை மூன்று வருடங்கள் இடைவெளியில் கல்யாணம் பண்ணுவது ஒரு ஜாதகத்தில் சனியோட ஆதிக்கம் ஒருவருக்கு இருந்தால் ஒருவருக்கு இருக்காது

இதுக்காகவே தன்னைவிட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யப்படுகிறது ஜோதிட சாஸ்திரப்படி வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தால் நமக்கு ஜாதகத்தில் இந்த தோசத்திலிருந்து விலகலாம் அதற்காகவே இப்படி செய்யக்கூடியது
By Nithiyandran r thedalin thedal tamil blog.... 

ஜோதிட சாஸ்திரப்படி பணம் கேட்கச் செல்லும் போது எத்தனை பூண்டு, கிராம்பு எடுத்துச் செல்ல வேண்டும்

Nithiyandran r thedalin thedal tamil blog

நீங்கள் ஒருவரிடம் பண பணம் கேட்க செல்லும் பொழுது எத்தனை பூண்டு எத்தனை கிராம் எடுத்து செல்ல வேண்டும்

 நீங்கள் நான்கு பற்கள் பூண்டு மற்றும் நான்கு கிராம்புகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் 

நீங்கள் ஒருவரிடம் கடனாக கேட்கச் செல்கிறீர்கள் என்றால் அது செவ்வாய் கிழமையாக இருக்க வேண்டும்

 குளிகை காலத்தில் நீங்கள் கடன் கேட்க வேண்டும் அவ்வாறு கேட்கும் பொழுது உங்களுக்கு கடன் எளிமையாக கிடைக்கும் 

அதே போல் கடனை அடைப்பதும் செவ்வாய்க்கிழமை அளிக்க வேண்டும் வாங்கிய கடனில் சிறிது அளவு செவ்வாய்க்கிழமை கொடுத்தாலும் உங்களது கடன் முழுமையாக தீர்ந்துவிடும்

 நீங்கள் பூண்டு மற்றும் கிராமை தவிர நான்கு மிளகுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் 

உங்கள் ஜாதகத்தில் ஆறாம் பாவமே கடலுக்குரிய பாவம் இந்த ஆறாம் பாவம் எப்படி உள்ளதோ அதை பொறுத்து உள்ளது கடன் அமையும் 

ஆறாம் பாவம் அதிபதி எந்த பாவத்துடன் தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்தை பொறுத்து உங்களுடைய கடன் அமையும்.

 ஆறாம் பாவம் அதிபதி விழுந்த நட்சத்திர அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் பொறுத்து உங்களுடைய கடனிடன் தன்மைகள் அமையும்

 ஒருவரிடம் நீங்கள் கேட்கச் செல்லும் பொழுது ஆறாம் பாவத்தை ஆராய்ந்து செல்வது நல்லது 

நீங்கள் ஒருவரிடம் பணம் கேட்க அதாவது கரன் கேட்கச் செல்கிறீர்கள் என்றால் குபேரன் லட்சுமியே வணங்கி செல்வது மிகவும் நல்லது. 

நீங்கள் குபேரனிடம் உங்களுக்கு வேண்டுதலை வைத்துவிட்டு கடன் கேட்கச் சென்றீர்கள் என்றால் உங்களுக்கு பணம் நிச்சயமாக கிடைக்கும்...... 
By Nithiyandran r

மாங்கல்ய தோஷம்

 Nithiyandran r thedalin thedal tamil blog..

பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஆண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது மனைவியும் பெண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது கணவனையும் குறிக்கும்

 இந்த மாங்கல்ய தோஷம் முக்கியமாக நான்கு லக்னத்திற்கு மிகவும் அதிக பாதிப்பை தரக்கூடியது 

அது உபய லக்னமான மீனம், மிதுனம் ,கன்னி, மற்றும் தனுசு இந்த நான்கு லக்னக்காரர்களுக்கும் முதல் தர பாதகாதிபதி குருவும் புதனும் ஆகும் 

இந்த நான்கு லக்னகாரர்களுக்கு குரு புதன் இருவரும் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துவார்

 இதுபோல சர ஸ்திர லக்கனங்களுக்கும் ஏழாம் பாவத்தில் இருக்கக்கூடிய கிரகம் எந்த அமைப்பில் உள்ளது என்பதை பார்த்து அதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும் 

எல்லா லக்னங்களுக்கும் ஏழாம் பாதகாதிபதி அதாவது ஏழாம் பாவ அதிபதி பாவக்கோளாக அமைந்துவிட்டால் அதற்கு சுப பார்வை கிடைக்காவிடில் அது தோஷத்தை ஏற்படுத்தும்

 ஒருவர் ஜாதகத்தில் கேது ஏழாம் இடத்தில் அமர்ந்தால் அவர் மாங்கல்ய தோசத்தை ஏற்படுத்திவிடும் 

அதே ஏழாம் அதிபதி கேதுடனும் ராகுடனும் செவ்வாயுடனும் சேர்ந்தால் அதுவும் தோஷத்தை ஏற்படுத்தும் 

இந்த மாங்கல்ய தோஷம் என்றால் என்ன மாங்கல்ய தோஷம் என்பது இருதார அமைப்பை கொண்டதாகும் அதாவது ஒன்று முதல் கணவர் இறக்க  அதனால் இரண்டாவது திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு 

இது ஒரு வகையான மாங்கல்யம் இன்னொன்று திருமணமே நடக்காத நிலையை உருவாக்கும் மூன்றாவது தாமதித்த திருமணத்தை ஏற்படுத்தும்

 முதலில் ஏழாம் வீட்டு அதிபதி யார் என்று கணிக்க வேண்டும் வீட்டு அதிபதி யாருடைய நட்சத்திரத்தில் விழுந்து உள்ளார் என்பதையும் அந்த ஏழாவிட்ட அதிபதிக்கு எந்தெந்த கிரகத்தின் பார்வை கிடைக்கிறது என்பதையும் நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் 

பிறகு ஏழாம் வீட்டு அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டு அதிபதி ஆட்சி உச்ச நீச்சம் பகை எந்த நிலைமையில் உள்ளார் என்பதை அறிந்து நாம் பார்க்க வேண்டும்

 சுப பார்வை அதாவது கோச்சாரத்தில் சுப பார்வை இருக்கும் பொழுது  ஏழாம் பாவத்துக்கு சாதகமான திசா புத்தி இருப்பின் தாராளமாக திருமணம் செய்யலாம்

மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் 28 அதாவது 30 வயதுக்கு முன்னால் மா திருமணம் செய்யலாமா என்றால் நிச்சயமாக அவர் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் 

ஆனால் அவர்களுக்கு  நடக்கக்கூடிய திசா புத்தியை கணிக்க வேண்டும் அது ஏழாம் பாவத்துக்கு அல்லது கணவனின் ஆயுளான எட்டாம் பாவத்துக்கு மாறகம் செய்யக்கூடிய அமைப்பில் இருக்கக் கூடாது

 அவ்வாறு இருந்தால் மாங்கல்ய தோஷம் கணவனை பாதிக்கும் மாறாக அவ்வாறு இருப்பின் அதற்கு உண்டான பரிகாரத்தை செய்து பின்பு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் 

மாங்கல்ய தோஷத்தில் அதற்கு உண்டான தசா புத்தி நடந்தால் மட்டுமே அந்த தோஷம் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர மற்றபடி அந்த தோஷம் எப்பொழுதும் பாதிப்பை ஏற்படுத்தாது

 ஆதலால் உங்களுடைய சுய ஜாதகததை ஆராய்ந்து அதில் தோஷம் இருப்பின்  அந்த பரிகாரத்தை செய்து கொண்டு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்...... 

By Nithiyandran r

5th house -5 ம் பாவம்

Nithiyandran r thedalin thedal tamil blog

ஐந்தாம் பாவம் என்பது ஜோதிடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும்

 புத்திர ஸ்தானமாகவும் திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய ஸ்தானமாகவும் காதல் திருமணம் பற்றி கூறவும் இந்த ஸ்தானம் விலங்குகிறது

 ஐந்தாம் பாவத்தில் எந்த கிரகம் உள்ளது அதற்கு தகுந்த அந்த பாவம் செயல்படும் 

ஒவ்வொரு லக்னத்திற்கும் ஐந்தாம் இடத்தில் பாவ கோள்கள் இருந்தால் பூர்வீக புண்ணிய சொத்தில் கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும்

 அதாவது உங்களுக்கு இரண்டு தலைமுறைக்கு முன்னால் வாங்கிய சொத்தை வழி வழியாக பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் நிச்சயமாக அந்த சொத்தில் பிரச்சனைகளை அது ஏற்படுத்தும்

 ஒருவர் காதலித்து திருமணம் செய்பவர் என்றால் அவருக்கு ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக அது லவ் மேரேஜ் 

அதே த்தில் சனி பகவான் இருந்தால் தன்னைவிட ஒரு படி கீழ் உள்ள பெண்ணை அதாவது  பொருளாதாரத்தில் கீழ்தங்கிய பெண்ணை நிச்சியமாக காதல் செய்வார்

 ஆனால் அது சனி பகவானால் நிறைபெறாமல் போய்விடும் அதே பாவத்தில் சூரியன் இருந்தால் அரசாங்க வேலையில் இருக்கும் பெண்ணை காதல் செய்வீர்கள்

 குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஆன்மீக வழியில் இருக்கும் பெண்ணை காதல் செய்வீர்கள் 

புதன் அந்த இடத்தில் இருந்தால் நீங்கள் ஒரு ஆசிரியரை காதல் செய்வீர்கள்

 செவ்வாய் அந்த வீட்டிற்கு இருந்தால் யூனிபார்ம் தொழில் செய்யும் ஒருவரை காதல் செய்வீர்கள் 

இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கு தகுந்தார் போல் உங்களது காதல் இருக்கும்

 ஏழாம் இடத்தை வைத்து உங்களது திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை முடிவு செய்ய வேண்டும் 

திருமணம் முடிந்த பிறகு குழந்தை பாக்கியம் என்பது அனைவருக்கும் இன்றி அமையாத ஒன்று 

இந்த குழந்தை  பாவத்திற்கு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய பாவம் ஐந்தாம் பாவம் ஐந்தாம் பாவத்தில் சுப கோள்கள் சுப பார்வை பெற்று இருந்தால் குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைக்கும் 

அதே இடத்தில் பாவ கோள்களில் இருந்து சுப பார்வை பார்க்கவில்லை என்றால் குழந்தை பாக்கியம் என்பது சற்று கேள்விக்குறியான ஒன்று 

 ஒவ்வொரு ஜாதகத்திலும் திசா புத்தி என்பது இன்றி அமையாது ஒன்று. ஐந்தாம் பாவத்திற்குரிய  கிரகம் திசை நடத்தும் பொழுது உங்களுக்கு இந்த பாவத்தின் பாவக்காரகங்கள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கும்

 ஐந்தாம் பாவத்தில் இருக்கும் கிரகம் விழுந்த நட்சத்திரத்தை குறித்து உங்களது குழந்தைகளின் என்ன ஓட்டங்களை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம் 

எந்த நட்சத்திரத்தில் விழுந்திருக்கும் அந்த நட்சத்திர அதிபதி எந்த பாவத்து தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்தின்படியாக உங்களுக்கு இந்த ஐந்தாம் பாவத்தின் காரத்துவங்களை அவள் செயல்படுத்துவார் 

ஐந்தாம் பாவத்திற்கு குருவின் பார்வை கிடைத்துவிட்டால் உங்களது குழந்தைகள் நல்லபடியாக வளரும்

 மாறாக ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றிருந்தால் புத்திர தோஷமும் பூர்வ புண்ணிய தோசமும் ,காதல் தோல்வியும் ஏற்படும்

 ஐந்தாம் பாவத்தில் நீச்சம் அடைந்த கிரகம் எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவத்தின் அதிபதி ஆட்சி உச்சம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் அமர்ந்து விட்டால் உங்களுக்கு அது நீச்ச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து விடும்

 அதாவது திடீர் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு எப்படி கொடுத்து விடும் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் திடீரென்று மிகப்பெரிய பணக்காரராக ஆகக்கூடிய அமைப்பு இந்த  ராஜயோகத்திற்க்கு உண்டு

 ஐந்தாம் வீட்டு அதிபதி 11ஆம் வீட்டு அதிபதியும் தொடர்பு கொண்டால் உங்களுக்கு குழந்தைகள் மூலமாக அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடும் அதேபோல் பூர்வ புண்ணிய சொத்துக்களை விற்பதனமும்  மூலமாக லாபத்தை பெறுவார்கள்.... 

By Nithiyandran r

How to check vehicle repair using KP Astrology?- nithiyandran r thedalin thedal tamil blog

thedalin thedal tamil blog.................

பொதுவாக வாகனத்தை குறிக்கும் பாவம்எந்த லக்னகமாக இருந்தாலும் அந்த லக்னத்தில் இருந்து நாலாம் பாவமாகும் இந்த நாலாம் பாவத்தை பொறுத்து ஒருவருடைய வாகன யோகம் எப்படி உள்ளது என்பதை தீர்மானிக்கப்படுகிறது
 இந்த நாலாம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்து சுப பார்வை பெற்றிருந்தால் உங்களுக்கு வாகனம் சுலபமாக அமையும் அதே பாவ கிரகங்கள் இருந்து சுப பார்வை பெறவில்லை என்றால் அந்த வாகனம் second hand வண்டி அமையும். 

 சரி வாகனத்திற்கு முக்கியமான கிரகங்கள் பார்த்தால் முதல் தர வாகனம் அதாவது புது வாகனம் வாங்குபவர்களுக்கு செவ்வாயே காரகன் அதே செகனண்ட் வண்டி வாங்குபவர்களுக்கு காரகன் சனி ஆகும்

 ஒருவர் புது வண்டியை வாங்க வேண்டும் என்றால் அவர் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரத்தில் வாங்க வேண்டும் அதை செகண்ட் வண்டி வாங்குபவர்கள் என்றால் சனியின் ஆதிகத்தில் வாங்க வேண்டும்

 கே பி ஜோதிடத்தில் உங்களுக்கு வாகனங்களை குறிக்க கூடிய குறிகாட்டி நாலாம் பாவத்தின் உப நட்சத்திர அதிபதி எதை குறிகாட்டுகிறதோ அதன்படியே செயல் அமையும்

கே பி ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு பாவத்தில் உள்ள கிரகத்தின் நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அதுவே வலிமை பொருந்திய கிரகமாக அந்தப் பாவத்திற்கு கருதப்படுகிறது

 அப்படி என்றால் நாலாம் பாவத்தில் ஏதாவது கிரகம் இருப்பின் அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகமே வாகனத்திற்குரிய கிரகம் இப்பொழுது நாலாம் பாவத்தை குறிக்கக்கூடிய குறிகாட்டியல் 3,11 ,12 ஆகிய பாவத்தை குறி காட்டினாள் நீங்கள் வாங்கிய வண்டி விற்கப் போகிறீர்கள் என்று அர்த்தம் 

அதே புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு 4,3,6,11 குறிக்கடிகளாக வந்தால் அவர்கள் புதிய வாகனத்தை வாங்குபவர்கள் என்று அர்த்தம் பழைய வாகனம் வாங்குபவர்களுக்கு 4,9,6,11 குறிகாட்டியாக வந்தால் அவர்கள் நிச்சயம் பழைய வாகனத்தை வாங்குவார்கள்

 சரி வாகனத்திற்கு பொதுவாக சுக்கிரனும் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் இப்பொழுது வண்டி எப்பொழுது அடிக்கடி பழுது ஏற்படும் என்று பார்த்தால் நாலாம் பாவத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரக நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகம் எந்த பாவத்தை குறி காட்டுகிறது என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்

 4 க்கு கெடுதல் செய்யக்கூடிய பாவங்கள் என்று பார்த்தால் நாலாம் இடத்தை வைத்து நீங்கள் எண்ணினால் ஒன்பதாம் இடம் அதாவது 4ஆம் பாவக் குறி காட்டி ஒன்பதாம் இடத்தை உங்களுக்கு டச் பண்ணா அந்த வண்டி அடிக்கடி பழுது ஏற்படும் 

அது நாளுக்கு எட்டாம் இடமாக வருவதால் அந்த குறி காட்டி வரும் பொழுது அந்த வண்டியை விற்க நேரிடும் நாலாம் பாவத்துக்கு பன்னிரண்டாம் பாவமா மூன்றாம் பாவம் வருவதால் நாலாம் பாவம் 3 குறி காட்டினால் உங்களுக்கு கண்டிப்பாக வண்டி விற்க நேரிடும்

 இப்படி கேபி ஜோதிடத்தில் குறிக்காட்டி பொறுத்து வண்டி வாகனம் விற்பது வாங்குவது பழுது பார்ப்பது என்பது குறிக்கப்படுகிறது 

அது பாரம்பரிய ஜோதிடத்தில் பார்த்தோமேயானால் நாலாம் பாவம் ஒருவர் லக்னத்திற்கு நாலாம் பாவம் என்பது வாகன யோகத்தை குறிக்கக்கூடிய பாவம் இந்த நாலாம் பாவத் தொழில் செய்பவர்கள் அவர்களுடைய தசா புத்தி எது நடக்குது என்பதை பார்க்க வேண்டும் 

இப்பொழுது நாலாம் பாவத்துக்கு 11 ஆம் பாவமாய் இரண்டாம் பாவம் வருவதால் யார் யாருக்கெல்லாம் இரண்டாம் பாவத்தின் திசை நடக்கிறதோ அவர்கள் எல்லாம் இந்த வண்டி வாகன தொழில் ஈடுபட்டால் மிகுந்த லாபத்தை பெறலாம் 

யாருக்கெல்லாம் 9,11 மற்றும் மூன்றாம் பாவத்தின் திசை புத்திகள் நடைபெறுகிறதோ அவர்கள் எல்லாம் இந்த வண்டி வாகன தொழிலை செய்தால் நிச்சயமாக அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அவர்கள் எதிர்பார்த்த லாபத்தை நிச்சயம் அடைய முடியாது 

காரணம் நாலாம் பாவத்துக்கு ஆறு எட்டு பன்னிரண்டு பாவங்களாக இந்த 9 11 மூன்றாம் பாவம் வருவதால் உங்களால் வாகன தொழில் கண்டிப்பாக லாபத்தை பெற முடியாது 

அதேபோல் நீங்கள் வாங்கும் வண்டி முதல் தர வண்டியா அல்லது செகனண்ட் வண்டியா என்பதே கருத்தில் கொண்டு நீங்கள் இதனுடைய பலன்களை ஆராய வேண்டும் 

அப்படி என்றால் வாகனம் எப்போது பழுது ஏற்படும் என்று பார்த்தால் நாலாம் பாவத்திற்கு ஆறாம் பாவம் தொடர்பு கொள்ளும்பொழுது அதாவது  ஒன்பதாம் பாவத்தின் திசா புத்தி அன்று நடக்கும் பொழுது யார் வண்டி வாகனம் வைத்துள்ளார்களோ அவர்களுக்கு நிச்சயமாக செலவு அதாவது பழுது ஏற்படும்..... 

By Nithiyandran R..... 

புத்திர தடை, புத்திர தோசம் - nithiyandran r thedalin thedal tamil blog....

Nithiyandran R Thesalin thedal tamil blog......

ஒருவர் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் என்பது ஐந்தாம் பாவத்தை குறிக்கும் ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் அவர்களின் ஐந்தாம் பாவம் புத்திர ஸ்தானத்தை குறிக்கிறது

 சரி புத்திர தோஷம் புத்திர தடை ஐந்தாம் பாவத்தில் அசுப கிரகமான சனி கேது சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு புத்திர தடை ஏற்படும் 

 தோஷம் என்பது குழந்தைகள் பிறக்கும் பிறந்த குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துவிடும் இது புத்திர தோஷம் புத்திரதடை என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னால் ஏற்படும் அபார்ஷன்  அதாவது கருக்கலைப்பு ஏற்படும்

 புத்திர தோஷம் என்பது குழந்தைகள் பிறந்து இறப்பார்கள் புத்திர தடை என்பது குழந்தை பிறப்பதற்கான தடையை ஏற்படுத்தும் 

சரி இந்த புத்திர தோஷம் தடை 

முதலில் புத்திர பேரு உண்டா என்பதை ஒருவர் ஜாதகத்தில் ஆராய வேண்டும் அதன் பின்பு அவர்களுக்கு புத்திரத்தடை புத்திர தோஷம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும்

 முதலில் லக்னத்தில் இருந்து கைவைத்து எண்ணினால் ஐந்தாம் பாவம்  ஐந்தாம் பாவத்தின் அதிபதி ஆட்சி உச்சம் சமம் போன்ற நிலைகளில் இருக்க வேண்டும் அதாவது ஐந்தாம் பாவத்தின் அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் ஐந்தாம் பாவத்தில் அசுப கோள்கள் இருந்தாலும் புத்திர பேர் நிச்சயமாக கிடைக்கும் 

ஆனால் சிறிது தாமதமாக கிடைக்கும் அதே ஐந்தாம் வீட்டு அதிபதி உள்ள நட்சத்திர அதிபதி ஏதோ ஒரு வகையில் ஐந்தாம் வீட்டை தொடர்பு கொண்டாலும் அல்லது அந்த நட்சத்திர அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு ஆனால் சிறு தடையாகும் 

 இப்பொழுது முக்கியமான விஷயம் என்னவென்றால் ஐந்தாம் பாவத்தை எடுத்துக்கொண்டு அதில் இருக்கக்கூடிய கிரகங்களை அறிய வேண்டும் சரி ஐந்தாம் பாவத்துக்கு சுப பார்வை கிடைத்தால் நிச்சயமாக குழந்தைகள் பிறக்கும். 

கோச்சாரத்தில் வருகின்ற குரு எப்பொழுது ஐந்தாம் பாவத்தை பார்க்கிறதோ அப்பொழுது குழந்தை பாக்கியம் ஏற்படும் உங்களுடைய தசாபுத்தையும் ஐந்தாம் பாவத்திற்கு சாதகமான சூழ்நிலை அமைந்து விட்டால் நிச்சயமாக அந்த மாதத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும் 

இந்த குழந்தை பாக்கியத்தை கொடுக்க கூடிய கிரகங்கள் எதுவென்று கண்டறிந்து அந்த கிரகத்திற்கு உண்டான தெய்வத்தை நாம் வழிபட்டால் நிச்சயமாக குழந்தை பெறுவதில் இருக்கும் தாமதத்தை குறைத்துக் கொள்ளலாம்

 குழந்தை பெற வேண்டி இருப்பவர்கள் நிச்சயம்  திருச்செந்தூர் சென்று முருக பெருமானை வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும்

ஐந்தாம் பாவ அதிபதி எந்த எந்த பாவத்துடன் தொடர்பு கொண்டுள்ளதோ அதனைப் பொறுத்து அந்த குழந்தையின் தன்மை இருக்கும்

 அதுமட்டுமில்லாமல் ஐந்தாம் வீட்டின் அதிபதி விழுந்த நட்சத்திரம் பொறுத்து அதனுடைய குணநலன்கள் இருக்கும் ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதை முழுமையாக பார்க்க வேண்டும்

 ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது சுக்கிரன் இருந்த நட்சத்திர அதிபதி ஆட்சியும் பெற்று இருந்தாலும் சமம் பெற்று இருந்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு

 இது போல் பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமைந்திருந்தால் நிச்சயமா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

 பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை இருவர் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து எந்த கோளின் பலம் அதிகமாக உள்ளது அதை பொருத்து ஆண் பெண் என்பதை நிலையம் செய்ய வேண்டும் 

ஆண்கள் ஜாதகத்தில் நானும் பெண்களை பெண் குழந்தையும் இருந்தால் இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது 

ஐந்தாம் பாவ அதிபதி ஆண் கிரகமாக இருந்து அதனுடன் கேது இருந்தால் நிச்சயமாக முதலில் கருச்சிதைவு நடக்கும்.... 

ஐந்தாம் பாவ அதிபதி நவ அம்சத்தில் எந்த இடத்தில் உள்ளார் என்பதையும் ஆராய்ந்து அதன் பலனை தீர்மானிக்க வேண்டும் 

குழந்தை அதற்கு காரணமான கிரகம் குரு இந்த குரு பகவான் எந்த நிலைமையில் உள்ளார் என்பதையும் ஆராய வேண்டும் 

அதாவது முதல் தர காரகமான குரு நல்ல நிலைமையில் இருந்தால் ஐந்தாம் பாவம் கெட்டிருந்தாலும் உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தும் 

அதே ஐந்தாம் பாவம் நல்ல நிலையில் இருந்து குருவும் நல்ல நிலையில் இருந்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் ஏற்படும் 

ஐந்தாம் பாவம் கெட்டு குரு நலமாக இருந்தால் சிறிது தாமதத்தில் ஏற்படும் குரு கெட்டு ஐந்தாம் பாவம் நல்லபடியாக இருந்தாலும் சிறிய தாமதத்தில் குழந்தை பிறக்கும்

 எப்பொழுது கோச்சார குரு ஐந்தாம் பாவத்தை பார்க்கிறாரோ அப்பொழுது குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது

 அப்பொழுது ஐந்தாம் பாவத்திற்கு சாதகமான திசா புத்தி நடந்து விட்டால் நிச்சயமாக எப்பேர்பட்ட தடை இருந்தாலும் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும்..... 

By Nithiyandran R


பிறந்த ராசி பலன் - thedalin thedal tamil blog

thedalin thedal tamil blog...........raasi palankal

மேஷ ராசி 

மேஷ ராசியில் சந்திரன் இருக்க பிறந்தவன் உருண்ட ,சிவப்பு கண்களை உடையவன். காய்கறிகளையும் சூடான ஆகாரத்தையும் மிதமாக புசிப்பவன், காமத்தில் நிச்சயம் சஞ்சாரம் செய்வதில் பிரியமுள்ளவன், தனம் இல்லாதவன் ,முழங்கால் பலவீனமாக உள்ளவன்.

 சண்டை பிரியன் ஸ்ரீகள் பேரில் இச்சை உடையவனாகவும் இருப்பான். சிரசு காயமுடையதாகவும் நகங்கள் கெட்டுப் போனதாகவும் இருக்கும் பிறரிடத்தில் பணி செய்வதில் திறமை உள்ளவன்.

 கல்வியாளன் ஜலத்தை கண்டால் பயம் உடையவனாகவும் பயந்தாலியாகவும் உள்ளங்கையில் சுக்கிரகையுடன் இருப்பான் 

ரிஷப ராசி 

இதில் சந்திரன் இருக்கு பிறந்தவன் அழகான தேகமும் விசாலமான முகமும் அழகான நடையும் உடையவன் முதுகு அல்லது முகப்பக்கங்களில் வடு காணப்படும் கெடுதியை சளியாமல் அனுபவிக்க கூடியவன்.

 அதிக அதிகாரமும் பராக்கிரமம் கொண்டவன் தயாள குணம் உடையவன் பெண் குழந்தைகள் உள்ளவன் பிள்ளைகளையும் பந்துகளையும் தந்தையும் விட்டு நீங்கி இருப்பான் சாந்தமான குணமடையும் எல்லோராலும் விரும்பக் கூடியவன்.

 வாலிபத்திலும் வையோகத்திலும் சுகமுடியவன் ஸ்திரைகள் பேரில் அன்பு உடையவன் சிநேகிதத்தில் பிரியம் உள்ளவன் நல்ல நடவடிக்கை புகழும் புத்திரர்களும் பெண்களும் உடையவர்

 மிதுன ராசி

 இதில் சந்திர கிரக பிறந்தவன் ஸ்ரீலோகனாகவும் பெண்களிடத்தில் அதிக அன்புடைவனாகவும் காம லீலைகள் அதிகமுடையதாகவும் இருப்பான்.

 மிகவும் கூர்மையானதாகவும் பிறருடைய நோக்கங்களையும் எண்ணங்களையும் கண்டறியக்கூடியதாகவும் புத்தி சாதகம் இல்லாமல் இருப்பான் அழகாகவும், உயர்ந்த மூக்கு உடையனாகவும், சிறந்த கண்களை உடையவனாகவும், சுருண்ட தலை முடி உளனாகவும் நயனமான பேச்சு  இருப்பான்.

 சங்கீதப் பெரியனாகவும் ஆடல் பாடல் வேடிக்கையில் வல்லவனாக இருப்ப நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் எப்போதும்  உல்லாச முடியுமாக இருப்பான்

 கடகம்

 கடகம் இதில் சந்திரனுக்கு பிறந்தவன் குள்ளமாகவும் தடிப்பான கழுத்துடையனாகவும் உயர்ந்த இடுப்பு உடையவனாகவும் உடம்பை வளைத்துக் கொண்டு வேகமா நடப்பதாக இருப்பான்.

. ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவன் எதிரிகளுக்கு அடங்கி நடப்பவன் அனேக வீடுகளையும் சந்திரனை போல சில காலம் வளரும் படியான செல்வத்தையும் சில காலம் குறைய முடியும் செல்வத்தையும் உடையவன்.

 நல்ல சினேகத்தில் விசுவாசம் உடையவனாக இருப்பான். ஜலத்தையும் காற்றையும் கண்டால் சந்தோஷப்படுமாகவும் நயப்பான வார்த்தைகளால் மயக்கி விடுவான்  தேச செஞ்சாரியாகவும் விரைவாக பேசக்கூடியதாக இருப்பான் 

சிம்மம் 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் விசாலமான முகமும் பெரிய கன்னங்களும் பழுப்பு நிறமான கண்களும் கோப சாபமும் உடையவன்.

  சண்டை செய்வதில் சாமர்த்தனமாகவும்  தான தர்மம் செய்வதில் தாராளமாகவும் தாயிடத்தில் அன்பு ஸ்ரீகல் மேல் வெறுப்பு உள்ளவன்.

 அற்ப புத்திரர்களுடையவன் சிறிய விஷயங்களில் அதிக கோபத்தை காட்டுவான் மலைகளையும் காடுகளையும் கண்டால் சந்தோஷம் அடைவனாகவும் மாமிசம் புசிக்கு ஆசை உடையவனாகவும் இருப்பான்.

 பல்நோய் பசி தாகம் இவைகளால் துன்பப்படுவான் 

கன்னி 

இதில் சந்திரனுக்கு பிறந்தவன் அந்தரமான கண்களையும் குறுகிய புஜங்களையும் கைகளையும் மிருதுவான தேகத்தையும் உடையவன்.

 அடக்கத்தினால் மிகவும் மெதுவாக நடப்பவன் சுகமாய் வாழ்பவன் உண்மையை பேசுபவன் நயமாக பேசுவான் வேத சாஸ்திரங்களிலும் சங்கீத ஆடல் பாடல்களிலும் சிற்ப சாஸ்திரத்திலும் வல்லவன்.

 சன்மார்க்கமும் உடையவன் ஸ்ரீலோகன் அந்நிய தேசத்தில் வசிப்பான் பிறருடைய சொத்தை அனுபவிப்பான் பெண்களையும் அற்ப புத்திரர்களை உடையவன். 

By Nithiyandran R