மேஷம் 2 ஆம் இடமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாகியவானவாகவும், வித்வானாகவும் விளங்குவார்.
ரிஷபம் 2 ஆம் இடமாக வருமானால் விவசாயத்தில் ஈடுபாடும் ரத்தினங்கள் வாங்குவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்.
மிதுனம் 2 ஆம் இடமாக ஆகுமானால் தனவான். இவனுக்கு பெண் பிள்ளைகள் அதிகம் பிறக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள்ளல் லாபம் உள்ளவர்.
கடகம் 2 ஆம் இடமாக அமைந்தால் நியாயமான மார்கத்தில் சம்பாதிப்பவர். மனைவி மூலம் சுகத்தை அடைபவர். பிள்ளைகளை பேணி காப்பவர்.
சிம்மம் 2 ஆம் இடமானால் நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும் உபகாரியாக இருப்பார்.
கன்னி 2 ஆம் இடமானால் அரசினால் வருமானம். யானை, குதிரை ரத்தினங்கள் முதலியவற்றை வேகுமானமாகப் பெறுவார்.
துலாம் 2 ஆம் இடமானால் பூமியினாலும, பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார்.
விருசிகம் 2 ஆம் இடமானால் கடமையே கண்ணாக உள்ளவர். பெண்களிடத்தில் பிரியமுள்ளவர். நல்ல பேச்சாளர். பிராமணர்களிடமும், தெய்வங்களிடமும் ஈடுபாடு கொண்டவர்.
தனுசு 2 ஆம் இடமாக அமைந்தால் தீரச் செயல்களால் செல்வம் கிடைக்கும். மாடு கன்றுகள் வீட்டில் நிறைந்து இருக்கும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.
மகரம் 2 ஆம் இடமாக ஆனால் பலவிதமான் யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும்.
கும்பம் 2 ஆம் இடமாக ஆனால் பழம், புஸ்பம் இவை மூலம் அதிகமான தனத்தை பெறுகின்றான். நல்லவர்கள் அனுபாவிக்க கூடிய பெரியோர்கள் மூலம் இவன் அனுபவிக்கின்றான்.
மீனம் 2 ஆம் இடமானால் நெம நிஸ்டைகள், உபவாசம் ஆகியவற்றால் தனம் கிடைக்கிறது. வித்தை மூலமாகவும், தாய் வழியாகவும், அரசு மூலமாகவும் பொருள் சேரும். புதையல் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
2 ஆம் இடததிபன் அந்தந்த இராசிகளில் பலன்.
லக்னத்திற்கு அடுத்த வீடானது இரண்டாவது ராசியாகிறது. அந்த ராசிக்குரிய அதிபதி:
லக்னதிலிருந்தால் பணக்காரன் ஆனால் கருமி. சுயநலம் கொண்டவர். வியாபாரி, சுகஜீவி, அழகான புருஷ அமைப்பு கொண்டவர்.
இரண்டாம் வீட்டில் இருந்தால் அமைச்சராகும் அந்தஸ்து. பெரிய குடும்பம், நவமணிகளை அணிய கூடியவர்.
மூன்றாம் இடதிலிருந்தால் துஷ்டன்; அதே சமயம் பயம் உள்ளவன். சகோதர்களுக்கு எதிரி.
நாலமிடதிலிருந்தால் தாய் தந்தை இடம் தனம் பெறுபவர். ஆத்மா சக்தி உள்ளவர். நீண்ட ஆயுள். (இரண்டாமிடததிபன் இந்த வீட்டில் பாப கிரகமானால் ஏழையாகவும் நோயுள்ளவராகவும் இருப்பார்).
5 ஆம்இடதிலிருந்தால் லோபி. துக்கமுள்ள்ளவர்; (பபகிரகமானால்) துஷ்டர்.
ஆறாம் இடத்தில சுபகிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவரானால் சத்ருவை நாசம் செய்பவர். பணம் சேர்பதில் சமர்த்தர். பபக்ராகங்களுடன் இருந்தால் வஞ்சகர். தரித்திரர்; கெட்ட சகவாசம் உள்ளவர்.
7 ஆம் இடதிலிருந்தால் நல்ல ரூபம் உள்ளவர். மனைவியை அதிகமாக நேசிப்பவர்; நிறைய புத்திரப் பெரு உள்ளவர்.பாப கிரகத்துடன் கூடி இருந்தால் குழந்தை அற்றவர்.
எட்டாம் இடத்திலிருந்தால் வாயு சரீரம்; நல்ல எண்ணமுடையவர்.
ஒன்பதாம் இடதிளிருண்தால் கொடையாளி; பலம் உள்ளவர்; விரத அனுஷ்டானம் உள்ளவர். பாப கிரகத்துடன் கூடினால் தாழ்ந்த்தவர்; தரித்திரர்.
1௦ ஆம் இடதில் இருந்தால்அரசு தொடர்பு, தாய் தந்தையரிடம் பக்தி, சுகஜீவி, அழகன், பாபர் இருந்தால் பெற்றோருக்கு இவரே எதிரி.
11 ஆம் இடதிலிருந்தால் லட்சமி கடாச்சம் பொருந்தியவர். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்.
12 ஆம் வீட்டில் பாபருடன் இருந்தால் துஷ்டன்; தூர தேச தீவுகளில் வாழ நேரிடும்; தன்னைவிட அறிவில் தாழ்ந்தவர்களுடன் சிநேகம் உள்ளவர்.

No comments:
Post a Comment
thanks for reading