லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்.....astro nithiyandran


லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்
ஜாதகருக்கு நீண்ட ஆயுள், புகழ், அந்தஸ்து இருக்கும். சுய முயற்சி உடையவர்.கௌரவத்திற்க்கு முக்கியத்துவம் தருபவர் தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பார்

உங்களுக்கு இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் உங்களுக்கு லக்கின அதிபதியுடன் திசை புத்தி நடைபெறும் பொழுது இரண்டாம் இடம் என்பது குடும்பஸ்தானம் தன விருத்தி பண கையிருப்பு வாக்கு ஸ்தானம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஆறாம் பாவத்திற்கு எட்டாம் பாவமாக கூறுவதால் ஆறாம் பாவகம் என்பது நோய் ஸ்தானமாகும், அதேபோல் கடன் வழக்கு ,எதிரி ,அடிமைத்தொழில் போன்றவற்றை குறிக்க கூடிய ஸ்தானம் அதற்கு எட்டாம் இடமான லக்னத்தில் இருந்து ஒரு கிரகம் தனது தசை புத்தி நடத்தும் ஆனால் ஆறாம் பாவத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும் அப்படி என்றால் ஒருவருக்கு கடன் என்பது சுலபமாக கிடைக்காது கடன் கேட்டால் கடன் கிடைப்பது அரிது அதுபோல் ஒருவருடைய நோய் தாக்கத்தை மட்டுப்படுத்தும் எதிரிகளை வெல்லக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும் வம்பு வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும்.

இதேபோல் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு ஆறாம் பாவம் என்பது ஒருவருடைய ஆயுளைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் எட்டாம் பாவம். அதேபோல் ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமும் எட்டாமிடம் இந்த எட்டாம் இடத்துக்கு ஆறாம் இடத்திலிருந்து ஒரு கிரகம் தசை நடத்தும் ஆனால் அப்பொழுது அவர்களுக்கு ஆயிலில் விருத்தி ஏற்படும் அவமானம் ஏற்படாமல் காக்கும் ஆதலால் லக்னத்தில் இருந்தால் உங்களுக்கு நற்பலன்களை ஏற்படுத்துவார்.

அதேபோல் கலக்கினத்திற்கு ஐந்தாம் இடம் என்பது உங்களுக்கு ஒன்பதாம் பாவமாக ஒன்பதாவது ஸ்தானமாக வருவதால் ஐந்தாம் இடம் என்பது அதாவது ஒன்பதாம் இடத்தில் புத்தி நடத்தும் பொழுது ஐந்தாம் இடம் பொதுவாக பூர்வ புண்ணியம்  குழந்தைகளுக்கான இடம் திடிர் அதிஷ்டம் போன்றவற்றை குறிக்கும் இதில் முன்னேற்றங்கள் ஏற்படும்

இதேபோல் ஒன்பதாம் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருந்து திசை புத்தி லக்னாதிபதி நடத்துவதால் நீண்ட தூரப் பயணம் கல்வி அதாவது உயர் கல்வி ஆன்மீகம் தந்தை போன்றவற்றைத் குறிக்கும் அப்படி என்றால் தந்தை மூலமா வரக்கூடிய கௌரவம் போன்றவை தரக்கூடிய ஸ்தானம் ஆதலால் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து திசை நடத்தும் போது ஒவ்வொருவருடைய கௌரவம் போன்றவை உயர்ந்து காணப்படும் ஆன்மீக வழியில் நாட்டம் அதிகமாக இருக்கும் தந்தைக்கு உடல்நிலை நன்றாக இருக்கும் 

இதேபோல் மத்த பாவங்களை வைத்து பார்க்கும் பொழுது  ஒவ்வொரு பலன்களை ஏற்படுத்தும் ஆதலால் லக்னதிபதி எந்த பாவத்தில் உள்ளார் என்பதை பொறுத்து அவருடைய பலன்கள் பலன்கள் மாறுபட்டு நடக்கும்


No comments:

Post a Comment

thanks for reading