அப்படி இருக்கும் பொழுது ஒரு பரிகாரத்திற்கும் மற்றொரு பரிகாரத்திற்கும் எத்தனை மாதங்கள் இடைவெளி வேண்டும் என்று பலர் குழப்பத்தில் கேட்கின்றனர்
முதலில் பரிகாரம் என்றால் என்ன பரிகாரம் என்பது எந்த கிரகத்தின் அடிப்படையில் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமோ அந்த கிரகத்தை சரிவர இயங்க செய்வதை பரிகாரம்
ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் பாதிக்கப்படும் பொழுது அந்த கிரகத்தின் கதிர்வீச்சு எந்த ஆலயத்தின் மீது அதிகமாக விழுகிறதோ அந்த ஆலயத்தில் சென்று இறைவனை தரிசனம் செய்யும் பொழுது
அதில் பிரசித்தி பெற்ற கற்களால் ஆன அந்த விக்கிரத்தின் மீது விழும் ஒளியானது நமது உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்
ஆதலாலே குறிப்பிட்ட பாதிப்புக்கு குறிப்பிட்ட ஆலயம் செல்ல வேண்டும் என்பது ஜோதிடத்தில் ஒரு விதி
பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மட்டும பிரசித்தி பெற்ற கற்களில் ஆன சிலைகள் வைப்பதுண்டு
ஆதலால் பிரசித்தி பெற்ற சிலைகளிலே படும் ஒளிகளுக்கு அந்த தன்மையும் அதில் படும் அபிஷேகப் பொருட்களுக்கு அபரிமிதமான தன்மையும் இருப்பதால் கோயில்களுக்குச் சென்று நீங்கள் அபிஷேகத்தையும் தரிசனத்தையும் கண்டு களிக்கும் பொழுது உங்களுக்குள் இருக்கும் பாதிப்பு சற்று விலகுவதற்கு வாய்ப்பு உண்டு
ஒரு பரிகாரத்திற்கும் மற்றொரு பரிகாரத்திற்க்கும் நிச்சயமாக இடைவெளி எதுவும் தேவையில்லை ஆனால் எந்த பரிகாரத்தை எந்த கிழமையில் செய்ய வேண்டுமோ அந்தப் பரிகாரத்தை அந்த கிழமையில் செய்ய வேண்டும்
அதனால் அந்த நாட்களில் இடைவெளி இருந்தால் போதும் அதாவது திதி நாட்கள் இது அனைத்தும் குறித்து, நீங்கள் சரியான முறையில் உங்களது பரிகாரத்தை செய்தால் போதும்
சரியான நேரத்தில் நீங்கள் ஆலயம் சென்று வந்தால் போதும் இதற்கென்று தனிப்பட்ட இடைவெளி எதுவும் இல்லை ஆதலால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆலயம் செல்லலாம் எப்போது வேண்டுமானாலும் பரிகாரத்தை செய்து முடித்துக் கொள்ளலாம் அதற்கான நேரத்தையும் காலத்தையும் குறித்துக் கொண்டால் போதும்
Astro Nithiyandran.....
No comments:
Post a Comment
thanks for reading